வெற்றியின் படிகள் நம் காலடியில்.
உங்களின் கூற்றுக்கு என் எண்ணங்கள்:
மாறுபட்ட கருத்துக்கள் தான் உண்மையின் உரைகற்கள். விதண்டாவாதம் எனக்குமே பிடிக்காது. இங்கு 1) அரசியல் கூடாது என்றால் எழுதமாட்டேன்.
அதற்க்கு இந்த மேடை தேவையில்லையே.
2) இங்கு எனது செய்யுள் முயற்சிகள் பிடிக்கவில்லையென்றால் எழுதமாட்டேன்.
கண்ணிருந்த குருடர்கள் வார்த்தை அது
3) மற்றவர்களின் உணர்ச்சியை மதிக்கக் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள் படிப்பறிவில்லாத என் பெற்றோர்கள்.
நல்ல படிப்பினை போதித்திருக்கின்றனர்.
3) எனது ஒரு விஷயம் எவருக்கேனும் எரிச்சலூட்டுகிறதென்றால், அதையே திரும்பத் திரும்பக் கொத்துவது Sadism ஆகும். அதை நான் செய்ய மாட்டேன்.
சி.எஸ்.ஜெயராமன் பாடிய பாட்டு நினைவுக்கு வருகிறது.
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இது தானடா....
4). எனக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லையென்றால் அதைத் தனிமையில் தெரிவிப்பேன்.
மேடை என்று வந்துவிட்டால் அது தவிற்க்க முடியாது.
5) பொதுவில் பாராட்டுவதும், தனிமையில் விமர்சிப்பதும் தான் எளிமையான பண்பு. எனது கருத்துக்கு விரோதமாக ஒருவர் கருத்து எழுதினால் ஒதுக்கி விட மாட்டேன்.
நம் நிலையை; தெளியபடுத்த வில்லை என்றால் மேலும் குழப்பமே
6) இவையெல்லாம் சுயதம்பட்டம் இல்லை. இதுவரை எனது பதிவுகளைப் பார்த்தாலே புரியும் அனைவருக்கும்.
One will go unnoticed, if not properly propagated.
7) இந்த அனைத்துப்பண்புகளும் உங்களிடமும் இருக்கிறது என்பதால் தான் இதை எழுதியிருக்கிறேன். மீண்டும் நன்றி. :-))))
உங்களின் அன்பிற்க்கு நன்றி.
Pl. keep it up
அன்புடன் ராகவன்.வ
--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
No comments:
Post a Comment