Thursday, February 18, 2010

Re: சுட்டிப் பெண்ணல்ல சீதா.....!!

சீதாம்மா & அவ்ங்க ஜால்ரா குரூப் ன்னு பஜனை பாபா ரேஞ்க்கு போய்ட்ருக்கு.

2010/2/19 சேட்டைக்காரன் <settaikkaran@gmail.com>

2010/2/19 jayashree shankar <jayashree43@gmail.com>
சுட்டிப் பெண்ணல்ல சீதா.....!!
 
நிலவுக்குக் கை கால் முளைத்த சிட்டு சீதா...
பாரதி கண்ட கனவை நனவாக்க
காரிகையாய் வளர்ந்து வந்த கனிகையவள்...


பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்-என்று பாரதியார் எழுதிய கவிதையின் உயிரோவியம் அம்மா. கல்தடுக்கினாலும் வாய் வலியில் "அம்மா" என்று தான் முதலில் அலறுகிறது. பிள்ளைகள் அம்மாவை மறந்தாலும், அம்மாவின் அன்பு என்ற நிழலைப் பிரித்தெடுத்து விட்டு ஒரு அடி கூட முன்னாலே எடுத்து வைக்க முடியாது. பெற்றவளாக இருத்தல் அவசியமில்லை; பரிவும் பாசமும் உள்ள எல்லா பெண்மணிகளும் அம்மா தான்.

அம்மா சக்திவடிவம்! அதனால் தான் அவரைப் பற்றிய முதல் கவிதையை இன்னொரு அம்மா எழுதியிருக்கிறார்-மிகவும் பொருத்தமாக!
 
சீதா மட்டும் தன் மனசுள்...ஆடிய
சுட்டிக் குழந்தையை இறுகக் கட்டிப் போட்டு
பயமுறுத்தி தூங்க வைத்திருந்தாள்..வருடக் கணக்கில்...
என்றாவது ஒருநாள், சுட்டி சீதா விழித்துக் கொண்டால்,
கொண்டாட்டமாய்  ஜீன்ஸ் போட்ட வேதாளம்
முருங்கை மரத்தில்... தொங்குமோ..?!!
சேட்டைக்கார மன்னனிடம்...கேள்வி கேட்டு கெடு வைக்க?

டெல்லிக்கு ராஜாவானாலும் தல்லிக்குப் பிள்ளை தானே? :-)))


 
 
பின்குறிப்பு:
எளிமையில் இனிமை கண்டு,
இளமை மணம் கொண்டு
புதுமையை நினைவோடு நிறுத்தி
தீஞ்சுவைத் தமிழில் கவி படித்து
பல்சுவையில் சுவைபட எழுத்தமுது படைத்து
எங்களது இதயங்களை திணறடித்த
எங்கள் "இதயக்கனி" சீதாம்மா..
இன்னும் பலகாலம் எங்களோடு கூட உங்கள்
அனுபவ பாடங்களை பகிர்ந்து எங்களை
ஆசிர்வதிக்க வேண்டுகின்றோம்..!

அம்மாவின் வெள்ளைமனத்திலிருந்து வெளிப்படும் ஆசி எல்லாருக்கும், குறிப்பாக பெண்களுக்குக் கிடைக்க வேண்டும். இப்படியொரு லட்சியப்பெண்மணியை அம்மா என்று அழைக்க முடிந்ததையும், அவரது குரலைக் கேட்டதையும் ஆண்டுகள் உருண்டோடினாலும் மறக்க முடியாது.

அருமையான கவிதை!

--

சேட்டைக்காரன்

http://settaikkaran.blogspot.com
*************************************************
உட்கார்ந்து யோசிப்போமில்லே......? :-)))))))))))

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

No comments:

Post a Comment